நேற்று வெள்ளிக்கிழமை(15) நீர்கொழும்பு போருதொட்ட கடல்பகுதியில் நீராடச் சென்ற
போது காணாமல் போன இரு மாணவர்களில் ஒரு மாணவரின் சடலம் இன்று (16) காலை
ஆறு மணியளவில் போருதொட்ட கம்மல்தொட்ட
கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
தளுவகொட்டுவ
சாந்த ஹானா மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் 16 வயதுடைய எவவடுகே ஐயெஸ் சத்துரங்க (16 வயது) என்பவரின் சடலமே கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மற்றைய
மாணவனை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
காணாமல்
போன மாணவர்கள் இருவரும் நீர்கொழும்பு தளுவகொட்டுவை பிரதேசத்தில் வசிப்பவர்களாவர்.
நேற்று
வெள்ளிக்கிழமை ஐந்து மாணவர்கள்; போருதொட்ட கடல்பகுதிக்கு வந்துள்ளனர். அவர்களில் நால்வர்
கடலில் நீராடுகையில் இருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். மற்றைய இரு மாணவர்கள் அங்கிருந்தவர்களால்; காப்பாற்றப்பட்டு
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காணாமல்
போன மாணவர்களை கொச்சிக்கடை பொலிஸார், கடற்படை மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் தேடும்
நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்நிலையில்
ஒரு மாணவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம்
தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment