Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, July 27, 2018

நாடகம் பயில வந்த மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல்


தரம் ஆறில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆங்கில பாட ஆசிரியரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (31) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் பி குமார நாயக்க நேற்று வெள்ளிக்கிழமை (27) உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு,  பிட்டிபனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில்  ஆங்கில பாட ஆசிரியராக பணியாற்றும் ரத்தொழுவ முத்துவாடிய வீதியைச் சேர்ந்த  சந்தேக நபரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.

நாடகம் ஒன்றை பயிற்றுவிப்பதற்காக வியாழக்கிழமை (26) அன்று பாடசாலை முடிவடைந்த பிறகு நிற்குமாறு சந்தேக நபரான ஆசிரியர் கடந்த புதன்கிழமை  (25) மாணவர்களிடம் கூறியுள்ளார் . அதன்படி கடந்த வியாழக்கிழமை பாடசாலை முடிவடைந்த பிறகு மாணவர்கள் நாடகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாடகப் பயிற்சியின் பின்னர் இரண்டு மாணவர்களை தவிர எனைய மாணவர்கள் வீடு சென்றுள்ளனர். அந்த இரண்டு மாணவர்களில் ஒரு  மாணவரை  அருந்துவதற்கு தண்ணீர் போத்தல் ஒன்றை வாங்கி வருமாறு  கடைக்கு அனுப்பிவிட்டு ஆசிரியர்; மற்ற மாணவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார் என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபரை துங்கல்பிட்டிய பொலிஸார் மன்றில் ஆஜர் செய்தனர்.


No comments:

Post a Comment