Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, August 21, 2018

நீர்கொழும்பில் இடம்பெற்ற புனித ஹஜ் பெருநாள் தொழுகை பாகிஸ்தானியர்களும் பங்கேற்பு (Photos)


 நீர்கொழும்பு நகரில் உள்ள சகல பள்ளிவாசல்களிலும் இன்று  ஹஜ் பெருநாள் தொழுகையும் விசேட பெருநாள் சொற்பொழிவும்  இடம்பெற்றன.

நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலில் மௌலவி  தாஹிர்  அஹ்மத் தலைமையில் பெருநாள் சொற்பொழிவும் தொழுகையும் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையகத்தின்  (UNHFCR) மூலமாக அகதி அந்தஸ்த்து கோரி இலங்கையில்
தற்காலிகமாக தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அஹ்மதி முஸ்லிம்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.




















இதேவேளை பஸ்யாலையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில் மௌலவி அஸ்மத் அஹ்மத் தலைமையில் ஹஜ் பெருநாள் தொழுகையும் விசேட பெருநாள் சொற்பொழிவும்  இடம்பெற்றது. இதில் பஸ்யாலையில் வாழும் அஹ்மதி முஸ்லிம்கள் பங்குபற்றினர்.






No comments:

Post a Comment