நாடு
முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3050 பரீட்சை நிலையங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை (5) நடைபெறும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு
3 இலட்சத்து 55 ஆயிரத்து 321 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இவர்களில் 87 ஆயிரத்து
556 பேர் தமிழ் மொழி மூலமாக பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களாவர்.
நீர்கொழும்பு
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் கடற்கரைத்
தெரு ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் விசேட
பூஜைகளில் கலந்து கொள்வதையும், பாடசாலை முன்பாக மாணவர்களும்
பெற்றோர்களும் நிற்பதையும் மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்கு செல்வதற்காக ஒன்று சேர்ந்து நிற்பதையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment