Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, December 9, 2019

Mrs. World 2020 அழகு ராணிப் போட்டியில் வெற்றி பெற்ற கெரோலின் ஜுரி வாகன் பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டு வரவேற்பு


அமெரிக்காவின்  லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற  திருமணமான பெண்களுக்கான  மிசஸ் வேர்ல்ட்  2020 (Mrs. World 2020)   அழகு ராணிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கையைச் சேர்ந்த  கெரோலின் ஜுரி இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை  கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு அவருக்கு மக்கத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
பின்னர் உலக அழகு ராணி கெரோலின் ஜுரி வாகனப் பேரணியாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார்.

இதன்போது அவர் திறந்த வாகனத்தில் நின்றவாறு பொது மக்களுக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
35  வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்கு திருமதி உலக அழகிப் பட்டம் கிடைத்துள்ளமை குறிப்படத்தக்கது. துற்போதைய கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க 1984  ஆம் ஆண்டு அவுஸதிரேலியாவில் நடத்தப்பட்ட முதலாவது மிசஸ் வோர்ல்ட்  போட்டியில்  உலக அழகு ராணி பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

  


No comments:

Post a Comment