Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, January 14, 2020

நீர்கொழும்பு கோயில்களில் இடம்பெற்ற தைப்பொங்கல் சமய நிகழ்வுகள் (PHOTOS)


 நீர்கொழும்பு நகரில்   அமைந்துள்ள கோயில்களில்;  தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசேட பூஜைகள் இன்று  (15) காலை இடம்பெற்றன. இந்நிகழ்வில் அதிக  எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர்.
நீர்கொழும்பு  கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் குகேஸ்வர குருக்கள் தலைமையில்  பூஜைகள் இடம்பெற்றன.
நீர்கொழும்பு  கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சிங்கமா காளியம்மன் கோயிலில் பரமேஸ்வர குருக்கள் தலைமையில் பூஜைகள் இடம்பெற்றன.
இரண்டு கோயில்களிலும் இடம்பெற்ற காட்சிகள் இவை

 பட விளக்கம் - ஸ்ரீ சிங்கமா காளியம்மன் கோயிலில் பெண்கள் பால் பொங்க வைப்பதையும், கோலம் போடுவதையும், வெளிநாட்டு பிரஜைகள் பூஜையை பார்வையிட வருகை தந்திருப்பதையும், நீர்கொழும்பு  ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் குகேஸ்வர குருக்கள் தலைமையில் பூஜைகள் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.
















No comments:

Post a Comment