Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, January 7, 2011

ரணில், சஜித் நீர்கொழும்பில்


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க , பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச உட்பட கட்சி முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் 06-1-2011 அன்று மாலை நீர்கொழும்பு நகரின் மணிக்கூட்டு கோபுரம் அருகில் இடம் பெற்றது.

அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறும் வாழ்க்கைச் செலவை குறைக்குமாறும் வற்புறுத்தியும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டும் இக்கூட்டம் நடத்தப்பட்டது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருஜய சூரிய , ஜயலத் ஜயவர்தன, ஜோசப் மைக்கல் பெரேரா, புத்திக பத்திரன, காமினி ஜயவிக்ரம பெரேரா, ஹெரான் விக்ரமரத்ன, மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள்,சட்டத்தரணிகள் மற்றும் பெரும் எண்ணிகையான கட்சி ஆதரவாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தை மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் ரொயிஸ் விஜித்த பெர்னாண்டோ தலைமையில் மாநகர சபை உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

1 comment:

  1. இச்செய்திக்கு நன்றி.தொடர்ந்தும் செய்திகளை தினசரி தாருங்கள்

    ReplyDelete