Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, August 1, 2020

நீர்கொழும்பில் ஹஜ் பெருநாள் தொழுகை

 இன்று னிக்கிழமை (1-8-2020) நீர்கொழும்பு பள்ளிவாசல்களில் ஹஜ் பெருநாள் தொழுகை இடம்பெற்றன.நீர்கொழம்பு மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலில் மௌலவி தாஹிர் அஹ்மத் தலைமையில் பெருநாள் தொழுகையும் பெருநாள் பிரசங்கமும் இடம்பெற்றது.

பள்ளிவாசலுக்கு வருகை தந்தோர் முகக் கவசம் அணிந்திருந்ததுடன்  சமூக இடைவெளியையும் பேணினர்.

Thursday, June 25, 2020

நீர்கொழும்பு மீனவர்களின் வலையில் அகப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன் ஏலத்தில் விற்பனை செய்வதற்காக ஜப்பானுக்கு அனுப்பி வைப்பு


நீர்கொழும்பு மீனவர்களின் வலையில் அரிய வகை மீன் ஒன்று அகப்பட்டுள்ளது.
நீர்கொழம்பு கடற்பகுதியிலிருந்து கடந்த மாதம் 7 ஆம் திகதி  வின்மெரின் (Win marine)  என்ற  பெயர் பொறிக்கப்பட்ட ரோலர் படகில் தொழிலுக்குச் சென்ற ஏழு பேர் அடங்கிய மீனவர்களே இந்த மீனைப் பிடித்துள்ளனர்.+
Southern Bluefin tuna என்ற ரகத்தையுடைய கெலவல்லா மீனே பிடிக்கப்பட்டுள்ளது.  மீனவர்கள்  மீன்களைப் பிடித்துக் கொண்டு வரும் போது கடந்த ஆறு தினங்களுக்கு முன்னர் இந்த அரிய வகை அதிக பெறுமதியுடைய மீன் அகப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி அதிகம் என்பதாலும் Southern Bluefin tuna என்ற ரகத்தையுடைய மீனின்  உயர் தரத்தை உடைய மீனின் ஒரு கிலோவினது விலை ஐயாயிரம் (5000 டொலர்) டொலர்  வரை

Sunday, June 21, 2020

நீர்கொழும்பு பள்ளிவாசலில் சூரிய கிரகணத் தொழுகை


நீர்கொழும்பு மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் கிரகணத் தொழுகை இடம்பெற்றது.
இன்று இடம்பெற்ற சூரிய கிரகணத்தையிட்டு இந்த தொழுகை இடம்பெற்றது.
புள்ளிவாசலுக்கு 50 இற்கும் குறைவானோர் அனுமதிக்கப்பட்துடன் பள்ளிவாசலுக்கு வருகை தந்தோர் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றியதுடன் சமூக இடைவெளியை பேணி தொழுகையில் ஈடுபட்டனர்.

Friday, May 29, 2020

நீர்கொழும்பில் வளர்ப்பு நாய் கொலை வழக்கு சந்தேக நபரான ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகருக்கு நிபந்தனைகளுடன் பிணை





நீர்கொழும்பு பெரியமுல்லையில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாயொன்றை சுட்டுக் கொலை செய்த வழக்கில்  பிரதிவாதியாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை 926) விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட ஓய்வு பெற்ற  பொலிஸ் அத்தியட்சகரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ரஜீந்ரா ஜயசூரிய கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்ய நேற்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.
ஓய்வு பெற்ற  பொலிஸ் அத்தியட்சகர் கிளமன்ட் பெர்னாந்து என்ற சந்தேக நபரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார்.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அன்பளிப்பு


நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு தனியார் நிறுவனம் ஒன்றினால் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு வார்ட் ஒன்று நிர்மாணித்து அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் எட்டு மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் ஏழாவது மாடியில் பத்து கட்டில்களுடன் இந்த தீவிர சிகிச்சைப் பிரிவு  அமைக்கப்பட்டுள்ளது.
புதிய தீவிர சிகிச்சைப் பிரிவு வார்ட்டை (Ward) பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை  (29) மாலை இடம்பெற்றது.

Sunday, April 26, 2020

கட்டானை வெலிஹேன பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு சிகரம் அமைப்பினர் உலர் உணவுப் பொருட்கள் அன்பளிப்பு


நீர்கொழும்பு கட்டான கல்விக்  கோட்டப் பிரிவை சேர்ந்த வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கும் அந்த பிரதேசத்தை சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தமிழ் பேசும் சில குடும்பங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை (19-4-2020)  முற்பகல்  நீர்கொழும்பு சிகரம் பவுண்டேசன் (Sigaram Foundation) அமைப்பினர் ஒரு தொகை உலர் உணவுப் பொருட்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று கையளித்தனர்.

Saturday, April 25, 2020

சிறைச்சாலை கைதிகள் பாடும் 'எழுக தாய் நாடே பாடல்' (Sirasa, Shakthi TV News First)


 சிரஸ, சக்தி தொலைக்காட்சி சேவையின் எழுக தாய் நாடே (நெகிட்டிமு சிறிலங்கா) பாடலை  நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள், சிறைக்காவலர்கள், சிறைச்சாலை அதிகாரிகள் பாடினர்.

இந்த பாடல் 17-4-2020 அன்று சிரஸ , சக்தி நிவ்ஸ் பெஸ்ட் (News 1St) இரவு நேர செய்தி அறிக்கைகளில் ஒளிபரப்பானது.
 கெமரா ஒளிப்பதிவு -  எம். இஸட். ஷாஜஹான்



நீர்கொழும்பு வைத்தியசாலையின் கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மேலதிக பிரிவொன்றை அமைத்துக் கொடுத்த சிவப்பு நட்சத்திர நிவாரண சேவைப் பிரிவினர்


நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மேலதிக பிரிவொன்றை மக்கள் விடுதலை முன்னணியின் சிவப்பு நட்சத்திர நிவாரண சேவைப் பிரிவினர் (ரத்து தருவ சஹன சேவா பலகாய) நிர்மானித்துக் கொடுத்துள்ளனர்.
இதனை கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (24-4-2020) மாலை வைத்தியசாலையில் நடைபெற்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர்  வைத்தியர் நிஹால் வீரசிங்க விசேட பிரிவை திறந்து வைத்தார்.

ஊரடங்கின் போது நீர்கொழும்பு பிரதான வீதிக்கு வருகை தந்த நான்கு மயில்கள்


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள வேளையில், பறவைகளும் விலங்கினங்களும் சுதந்திரமாக வீதிகளில் உலா வருவதை  பல இடங்களிலும் காணக் கூடியதாக உள்ளது.
நீர்கொழும்பு பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை (25) மாலை நான்கு மயில்கள் வருகை தந்ததை காண முடிந்தது. அதில் மூன்று மயில்கள் கட்டிடமொன்றின் கூரையில் நின்றன. ஒரு மயில் மாத்திரம் வீதியோரம்

Sunday, April 12, 2020

வெலிஹேன பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சசிகுமார் அன்பளிப்பு


தற்போது நாட்;டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக வறுமைக் கொட்டின் கீழ் வாழும் மக்கள் பெரிதும் கஸ்டப்படுகின்றனர்.
 இந்நிலையில், நீர்கொழும்பு வெலிஹேன, மற்றும் தோப்பு பிரதேசங்களில்;  வாழும் மக்களுக்கு வத்தளை மாபொலை நகர சபை உறுப்பினர் சசிகுமார் மற்றும் பாஸ்டர் எஸ். உதயச் சந்திரன் ஆகியோர் உலர் உணவுப் பொருட்களை ஞாயிற்றுக்கிழமை (12-4-2020)  அன்பளிப்புச் செய்தனர்.

Thursday, April 9, 2020

மீன்பிடி படகொன்றைத் திருடி எமில்டன் வாவி வழியாக பேலியாகொடைக்குச் சென்று மட்டக்குளியிலிருந்து ஹெரோயின் போதைப் பொருளை விற்பனைக்காக வாங்கி வந்த மூவர் நீர்கொழும்பு துங்கல்பிட்டி பொலிஸாரால் கைது


 ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் நீர்கொழும்பு களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகொன்றை திருடி அதில் களவாடப்பட்ட படகு எஞ்சின் ஒன்றைப் பொறுத்தி நீர்கொழும்பு எமில்டன் வாவி ஊடாக கொழும்பு பேலியாகொடை பெரிய பாலம் வரையில் சென்று போதைப் பொருளை  வாங்கி வந்த மூன்று நபர்களை நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த துங்கல்பிட்டிய பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளமை விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா - கவியாக்கம் - கலாநெஞ்சன் ஷாஜஹான்


உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா (கொவிட் 19)  வைரஸ் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தக் கவிதை  (07-04-2020) ஆக்கப்பட்டுள்ளது.

-     கவியாக்கம் - கலாநெஞ்சன் ஷாஜஹான் (இலங்கை, நீர்கொழும்பு)



Tuesday, March 17, 2020

அரசாங்கம் பொது விடுமுறையாக தினமாக அறிவித்ததை அடுத்து வீதிகள் வெறிச்சோடின : வர்த்தகர்கள் பாதிப்பு


 கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இன்று (17)  முதல் மேலும் மூன்று தினங்கள் (வியாழக்கிழமை வரை) அரசாங்கம் பொது விடுமுறையாக தினமாக அறிவித்ததை அடுத்து நீர்கொழும்பு நகரம்  தொடர்ந்து  வெறிச் சோடி காணப்படுகிறது.
நகரின் வர்த்தக பிரதேசம் உட்பட பெரும்பாலான இடங்களில் வீதிகளில் சன நடமாட்டம் மிகக் குறைவாகக் காணப்பட்டது. வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளபோதும் பொருட்களை வாங்குவதற்கு பொது மக்கள் மிகக் குறைவாகவே வருகை தருவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Saturday, March 7, 2020

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி (Photos)


 நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின்  நிறைவு விழா  5-3-2020 அன்று மாலை அதிபர் நா. புவனேஸ்வர ராஜா  தலைமையில் பாடசாலை மைதானத்தில்  நடைபெற்றது.
 நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா கலந்து கொண்டார். ,சிறப்பு விருந்தினர்களாக மேல் மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர்  ஆர். உதயகுமார், நீர்கொழும்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.ஏ.சி. பெர்னாந்து, நீர்கொழும்பு பிரதிக்கல்வி

Monday, March 2, 2020

மஹர சிறைச்சாலையில் உள்ள பள்ளிவாசல் இந்த குண்டு தாக்குதலின் பின்னர் மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமரிடம் முறைப்பாடு செய்துள்ளோம் - முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஹுப் ஹக்கீம்


நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு  நேற்று செவ்வாய்க்கிழமை முதல் நாளை வியாழக்கிழமை வரை மூன்று தினங்கள் கல்விக் கண்காட்சியும் களியாட்ட நிகழ்வும் இடம்பெற்றது.
26-2-2020 இரண்டாவது   தின நிகழ்வு இடம்பெற்றது. மாலை நடைபெற்ற நிகழ்வில்  முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஹுப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
 கல்லூரி அதிபர் எம். எஸ்.எம். ஸஹீர்  தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் மேல் மாகாண சபையின்  முன்னாள்  உறுப்பினர் ஷாபி ரஹீம் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.